Sirkazhi - Vinaayaganey
September 27th, 2006 by macshiva
பாடல்: வினாயகனே வினை தீர்ப்பவனே
குரல்: சீர்காழி கோவிந்தராஜன்
ராகம்: கீரவாணி
வினாயகனே வினை தீர்ப்பவனே
வேழமுகத்தோனே ஞால முதல்வனே
(வினாயகனே)
குணானிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்
(வினாயகனே)
உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கண நாதனே மாங்கனியை உண்டாய்
கதிர் வேலவனின் கருத்தில் நின்றாய்
(வினாயகனே)