Subscribe to
Posts
Comments

Archive for the 'Fav. Tamil songs' Category

Hey Ram - Sanyasam

இந்த பாடல் அதன் காட்சியமைப்புக்காக நிரம்ப பிடிக்கும், நானே அந்த இடத்தில் இருப்பது போல் ஒரு தோற்றம்.

Hey Ram - Nee Paartha

சில பாடல்களை எத்தனை முறை வேண்டுமேன்றாலும் கேட்கலாம், அலுக்கவே அலுக்காது மனதை லேசாகவும் வைக்கும், அதே சமயம் கனமாகவும் ஆக்கும்.
அப்படிபட்ட ஒரு பாடல் தான் இதுவும், Illayaraja வின் இசையில் kamal ன் நடிப்பில்..

பாடல்: காக்கைச் சிறகினிலே நந்தலாலா
வரிகள்: சுப்ரமணிய பாரதி
ராகம்: யதுகுல காம்போதி
தாளம்: ஆதி
காக்கைச் சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரியனிறம் தோன்றுதையே நந்தலாலா
(காக்கை)
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
(காக்கை)
கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
(காக்கை)

மௌன ராகம்
இளையராஜா
பாடல்: மன்றம் வந்த தென்றலுக்கு
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வாலி
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடாதெனும் வானம் உண்டோ சொல்
(மன்றம் வந்த)
தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு மாலையும் மேளமும் தேவையென்ன
சொந்தங்களே இல்லாமல் பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன சொல்
(மன்றம் வந்த)
மேடையைப் போலே வாழ்கை அல்ல நாடகம் ஆனதும் […]

காதல் தேசம்
ஏ ஆர் ரஹ்மான்
(1997)
பாடல்: எனைக் காணவில்லையே நேற்றோடு
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம் குழுவினர்
வரிகள்: வைரமுத்து
அன்பே…
எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
அன்பே…
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா
அன்பே…
நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே
வா வா…
என் வாசல்தான்…
வந்தால்…
வாழ்வேனே நான்
ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்
அன்பே உன் பேரைச் சொல்லித் தான்
தீக் குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்
நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்
நீ […]

பாடல்: பூங்காற்றிலே உன் சுவாசத்தை
குரல்: உன்னிமேனன், சுவர்ணலதா
வரிகள்: வைரமுத்து
இசை: ஏ.ஆர்.ரஹமான்
ஓ…கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை
பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா
(பூங்காற்றிலே)
காற்றின் அலை வரிசை கேட்கின்றதா கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்
வலிகின்றதா நெஞ்சு நனைகின்றதா
இதயம் […]